உடுமலை சங்கர் கொலை வழக்கு விசாரணை மீண்டும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர் (22). இவரும், பழநியைச் சேர்ந்த கௌசல்யாவும் காதலித்து கலப்புத் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து, கடந்த 2016 மார்ச் 13-ஆம் தேதி உடுமலையில் சங்கர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்பட 11 பேரை உடுமலை போலீஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து, இந்த வழக்கு வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை புதன்கிழமை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை மீண்டும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தார்.