விசைத்தறியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி, முத்துக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை வழங்க ஒப்புக்கொள்ளாவிடில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறிகளையும் நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் விசைத்தறியாளர்கள் கரைப்புதூர் ராஜேந்திரன், ஆறுக்குட்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சக்திவேல் நன்றி கூறினார்.