திருப்பூர்

உடுமலை வி.கெங்குசாமி நாயுடு மறைவு:  இரங்கல் கூட்டத்தில் புகழ் அஞ்சலி

DIN

கல்வியாளரும், பிரபல தொழில் அதிபருமான உடுமலை டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
உடுமலை வெங்கட நிலையத்தில் நடைபெற்ற இந்தஓஈ கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில செயல் தலைவர் வி.மோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் வி.வெங்கடேசன், செயலர் கோவை எஸ்.ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடுவுக்கு அனுதாபம் தெரிவித்து நிர்வாகிகள் பேசியதாவது:
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு தமிழகம் முழுவதும் 60- க்கும் மேற்பட்ட ஆங்கிலவழிப் பள்ளிகளைத் தொடங்கினார். தற்போது இந்தப் பள்ளிகளால் அனைத்து சமுதாயத்தினரும் பயன் அடைந்து வருகின்றனர். நமது அமைப்பின் மூலம் தமிழகம் முழுவதும் இலவசத் திருமணங்கள், கல்வி உதவித் தொகைகள், மருத்துவ உதவிகள், இலவச நோட்டுப் புத்தகங்கள்வழங்குவது உள்ளிட்ட ஏராளமான உதவிகளைச் செய்துள்ளார் என்றனர். 
இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஜி.வாசுதேவ நாயுடு, என்.வேதகிரி, எம்.சின்ராஜ், எம்.விஜயராகவன், பிரபாகர், வி.பழனிச்சாமி, உடுமலை ஜி.நடராஜ், ஜல்லிபட்டி வி.நாராயணசாமி மற்றும் மண்டல, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT