வெள்ளக்கோவிலை அடுத்த ஓலப்பாளையத்தில் பள்ளி வாகனம் மோதி பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
வெள்ளமடை அருகே அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மனைவி கருப்பாள் (55). தொழிலாளி. இவர் ஓலப்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த முத்தூர் தனியார் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பாள், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
புகாரின் பேரில், வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.