திருப்பூர்

பள்ளி வாகனம் மோதி பெண் சாவு

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த ஓலப்பாளையத்தில் பள்ளி வாகனம் மோதி பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
வெள்ளமடை அருகே அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மனைவி கருப்பாள் (55). தொழிலாளி. இவர் ஓலப்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது,  அவ்வழியே வந்த முத்தூர் தனியார் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமான வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பாள்,  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  
புகாரின் பேரில்,  வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT