தேசிய அறிவியல் தினம்
உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூர்தேசிய அறிவியல் தினம்
உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
உடுமலை அருகே உள்ள ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் சாவித்திரி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் கண்ணபிரான், தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும், நோபல் பரிசு பெற்ற சர் சி.வி.ராமன் குறித்தும் எடுத்துக் கூறினார். இதையொட்டி சர் சி.வி.ராமனின் வாழ்க்கை வரலாறு காணொலி படம் மூலம் விளக்கப்பட்டது. புவி வெப்பமாதல் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சர் சி.வி.ராமன் போன்ற முகமூடிகளை அணிந்து அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை ஆக்கத்துக்காக பயன்படுத்துவோம், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவோம், இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பாடுபடுவோம் என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.