நாட்டு நலப்பணி திட்ட முகாம்
உடுமலை வித்யாசாகர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் 3 கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
உடுமலை வித்யாசாகர் கலை, அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் 3 கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
வளமான இந்தியாவிற்கு நலமான இளைஞர்கள் என்ற தலைப்பில் உடுமலையை அடுத்துள்ள பாப்பான்குளம், ரெட்டிபாளையம், சாளரப்பட்டி ஆகிய கிராமங்களில் மார்ச் 24ஆம் தேதி முதல் இந்த முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தூய்மைப் பணி, எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி, சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி, மரம் வளர்ப்பு, ரத்த தானம், நீர் வள மேலாண்மைத் திட்டக் கருத்தரங்கு, ரத்த தான முகாம், கோயில் உழவாரப் பணிகள், சமூக விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் 30 ஆம் தேதி முகாம் நிறைவடைய உள்ளது.
என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் கே.செல்லத்துரை, பி.சுதா, எம்.சந்திரன், உடற்கல்வி இயக்குநர் ஜெ.சண்முகராஜா உள்ளிட்டோர் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.