வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு சனிக்கிழமை தேங்காய், கொப்பரை வரத்து மிகவும் குறைவாக இருந்தது.
இங்கு வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெறும். கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் தேங்காய்களில் மட்டைகளை உரிக்க முடியாமலும், கொப்பரைரழை உலர்த்த முடியாததாலும் சனிக்கிழமையில் வரத்து 75 சதவீதம் குறைந்திருந்தது.
இந்த வாரம் 4,107 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. குறைந்தபட்சம் ஒரு கிலோ ரூ.21.50, அதிகபட்சம் ரூ.26.65க்கு விற்பனையானது. சராசரி விலை ரூ.25.50. இதன் விற்பனைத் தொகை 38 ஆயிரத்து 207 ரூபாயாகும்.
கொப்பரை 200 கிலோ வரத்து இருந்தது. கிலோ ரூ.75.00 முதல் ரூ.86.05 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ78.70. இதன் விற்பனைத் தொகை ரூ.15 ஆயிரத்து 600. விவசாயிகள் 13 பேரும், வியாபாரிகள் 3 பேரும் ஏலத்தில் கலந்து கொண்டனர்.
விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீரங்கன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.53 ஆயிரத்து 807 விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது.