சேவூரில் விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்
அவிநாசி வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் சேவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அவிநாசி வடக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் சேவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு அவிநாசி வடக்கு ஒன்றியப் பொதுச் செயலாளர் ராம்குமார் தலைமை வகித்தார். ஒன்றியப் பொறுப்பாளர்கள் லட்சுமணன், ரமேஷ், அஜீத், பிரவீண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர் மாவட்டச் செயலாளர் மணிகண்டன், மாவட்டப் பேச்சாளர் நவநீதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில், சேவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட 38 இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்துவது. செப்டம்பர் 15ஆம் தேதி சேவூர் கைகாட்டியில் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி, அவிநாசி வழியாக சிறுமுகை ஆற்றில் சிலைகளை விசர்ஜனம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.