திருப்பூர்

கார்கள் மோதல்: உயிர் தப்பிய தொழிலாளி

DIN

காங்கயத்தில் இரு கார்கள் மோதிய விபத்தில், ஒரு கார் சாலையோரம் இருந்த கோணிப்பை தைக்கும் கடைக்குள் புகுந்தது. இதில், அங்கு இருந்த தொழிலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காங்கயத்தைச் சேர்ந்தவர் சசிகுமார் (60). இவர், தனது வேனில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் காங்கயம் நகரம், கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள எரிவாயு நிரப்பும் பங்குக்குத் செல்வதற்காக தனது வாகனத்தைத் திருப்பியுள்ளார். அப்போது எதிரில், கோவையில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. 
இதில், சசிகுமாரின் வேன் சாலையோரம் நின்றுகொண்டிருந்த மற்றொரு  வேன் மீது மோதி, அதன்பின் சாலையோரம் உள்ள சாக்குக் கடைக்குள் புகுந்தது.
இதில், கார் வருவதைப் பார்த்த சாக்கு தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி பழனிசாமி,  உடனடியாக அங்கிருந்து விலகித் தப்பினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. சசிக்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
அவருக்கு காங்கயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 
இவ்விபத்து குறித்து காங்கயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT