திருப்பூர்

திருப்பூரில் மும்மதத்தினர் பங்கேற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம்

DIN

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக மும்மதத்தினர் பங்கேற்ற விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் திருப்பூர் ஸ்ரீ நகரில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூர், ஸ்ரீ நகரில் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 20ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநகரத் தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார். இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த ஜமால், கிறிஸ்துவ அமைப்பைச் சேர்ந்த ஸ்டாலின் ஆகியோர் விசர்ஜன ஊர்வலத்தை தொடக்கிவைத்தனர்.
இதில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சுதாகர், மாநகரச் செயலாளர் முருகபாண்டி, இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் மனோகரன், திமுக பொறுப்பாளர் காந்தி, அதிமுக பொறுப்பாளர் பிரபு, பசும்பொன் பக்தர் பேரவை லஷ்மணன், ஸ்ரீ கருப்பண்ண சாமி ஐயப்பா சேவா சங்க அறக்கட்டளைப் பொறுப்பாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT