திருப்பூர்

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை

DIN

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிற் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், தமிழக சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நாளில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள், இதர வகை தொழிலாளர்கள் என அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் அன்றைய தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT