திருப்பூர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

DIN

வெள்ளக்கோவில் - முத்தூர் சாலையில் குழாய் உடைந்து 15 நாள்களாக குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து வருகிறது. 
கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் வெள்ளக்கோவில் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வெள்ளக்கோவில் - முத்தூர் சாலை மின்வாரிய அலுவலகம் அருகே கடந்த 15 நாள்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. 
கனரக வாகனங்கள் சென்றதால் பாரம் தாங்காமல் சாலைக்கு கீழே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்கி நின்று சாக்கடையில் கலந்து வருகிறது.
எனவே, குடிநீர்க் குழாயை உடனடியாக சீர் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT