திருப்பூர்

7 ஊராட்சிகளில் குடிமராமத்துப் பணிகள்: எம்எல்ஏ துவக்கிவைத்தார்

DIN

திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகளில் உள்ள குட்டைகளில் குடிமராமத்துப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
 திருப்பூர்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காளிபாளையம், பெருமாநல்லூர், ஈட்டிவீராம்பாளையம்,  தொரவலூர், வள்ளிபுரம், மேற்குபதி, சொக்கனூர் ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள குட்டைகளை சீரமைப்பதற்கான குடிமராமத்துப் பணிகள் புதன்கிழமை துவங்கப்பட்டன. 
இப்பணிகளை திருப்பூர் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார். உடன், ஊராட்சி  ஒன்றிய ஆணையர் கனகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மகுடீஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்துமதி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எஸ்.எம்.பழனிசாமி, பொன்னுலிங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துரத்தினம், பொறுப்பாளர்கள் சந்திரசேகர், பாலசுப்பிரமணி, ஐஸ்வர்யா மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT