திருப்பூர்

காங்கயம் அரசுக் கல்லூரியில் 16இல் இறுதி கட்ட கலந்தாய்வு

DIN

காங்கயம் அருகே முள்ளிப்புரத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெறவுள்ளது.
காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2019-20ஆம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை பாடப் பிரிவில் சேர்ந்து பயில்வதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இறுதி கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 
கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியர் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்கள், ஆதார் கார்டு, ஜாதிச் சான்றிதழ், 2 புகைப்படம், அசல் சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் இரண்டு நகல்களோடு பெற்றோர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என, கல்லூரி முதல்வர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT