திருப்பூர்

தடகளப் போட்டி: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி மாணவி சிறப்பிடம்

DIN

திருப்பூரில் நடைபெற்ற தடகளப் போட்டியில், காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
திருப்பூர் மாவட்ட தடகள விளையாட்டுக் கழகம் சார்பில் மாவட்ட இளையோர் தடகள போட்டி திருப்பூரில் உள்ள டீ பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக். பள்ளி11-ஆம் வகுப்பு மாணவி ஆர்.சினேகவர்ஷினி 17 வயதுக்குள்பட்டோருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார்.
இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.
போட்டியில் வெற்றிபெற்ற மாணவி சினேகவர்ஷினி, உடற்கல்வி ஆசிரியர்கள் கே.மணிவேல், டி.சதீஷ் ஆகியோருக்கு பள்ளித் தாளாளர் கே.வைத்தீஸ்வரன், பள்ளி முதல்வர் மு.ப.பழனிவேலு, ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

SCROLL FOR NEXT