திருப்பூர்

அவிநாசி அருகே சாலை விபத்துகளில் இருவர் சாவு

DIN

அவிநாசி அருகே நிகழ்ந்த   இருவேறு சாலை விபத்துகளில் இருவர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர்.
அவிநாசி அருகே பழங்கரை பச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எம்.மக்ரான் (70). இவர் பெரியாயிபாளையத்திலிருந்து நரிக்குறவர் காலனி செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே அதிவேகமாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மக்ரான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் பசுமை நகரைச் சேர்ந்தவர் நடராஜ் (56). இவர்  பெருமாநல்லூரிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் பசுமை நகர் அருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நடராஜ் உயிரிழந்தார்.
இது குறித்து பெருமாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT