திருப்பூர்

பொதுத் தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி: மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு

DIN

திருப்பூரில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்ற கருவம்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
திருப்பூர், கருவம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 2018-2019 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 99 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். 
இதைத் தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முதல் மூன்று இடம் மற்றும் பாடவாரியாக முதலிடங்களைப் பிடித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.பழனிசாமி தலைமை வகித்தார்.  இதில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, தலைமை ஆசிரியர் குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT