திருப்பூர்

அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா துவக்கம்

DIN

பல்லடத்தில் அங்காளம்மன் கோயில் 44ஆவது குண்டம் திருவிழா விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) துவங்குகிறது. திங்கள்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றம், இரவு 7 மணிக்கு யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி பூஜை, இரவு 10 மணிக்கு முகப்பள்ளயம் மயான பூஜை நடக்கிறது.
5ஆம் தேதி காலை 7மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம், மாலை 5 மணிக்கு மாவிளக்கு, மாலை 5.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல், இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 6ஆம் தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்குதல், காலை 9.15 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 
7ஆம் தேதி காலை 10 மணிக்கு கொடி இறக்குதல், காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல், மாலை 6 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, நள்ளிரவு பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா ஆகியவை நடைபெறவுள்ளன.  விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு, விழா குழுவினர், மார்த்தார் குல மக்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT