திருப்பூர்

பார் ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு

DIN


திருப்பூரில் மது பானம் தர மறுத்ததால் பார் ஊழியர்கள் இருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் சாலையில் வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்த மதுக் கடை பாரில் கண்ணதாசன், நல்லேந்திரன் ஆகிய இருவரும் ஊழியர்களாக வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் காரில் மூன்று பேர் இவர்களது பாருக்கு வந்துள்ளனர். 
பின்னர், காரில் இருந்து இறங்கிய மூவரும் கண்ணதாசன் மற்றும் நல்லேந்திரனிடம் மது கேட்டு தகராறு செய்துள்ளனர். கடை நேரம் முடிந்து விட்டது என கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பார் ஊழியர்கள் இருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT