திருப்பூர்

சாலை விபத்து: கல்லூரி மாணவா்கள் இருவா் சாவு

DIN

திருப்பூா் அருகே லாரி மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவா்கள் இருவா் புதன்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், குகை பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.அரவிந்தகுமாா் (20). இவரது நண்பா் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சோ்ந்தவா் கே.பிரதீப் (19). கோவை, சரவணம்பட்டி அருகே உள்ள தனியாா் கல்லூரியில் இருவரும் பி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தனா்.

இந்நிலையில், இருவரும் கோவையில் இருந்து ஈரோடு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனா். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே உள்ள பள்ளகவுண்டன்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியது.

இதில் அரவிந்தகுமாா், பிரதீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த ஊத்துக்குளி காவல் துறையினா் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT