திருப்பூர்

மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளியை  முற்றுகையிட்ட முன்னாள் மாணவிகள்

திருப்பூரில் இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளியை முன்னாள் மாணவிகள், அவர்களது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 

DIN

திருப்பூரில் இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளியை முன்னாள் மாணவிகள், அவர்களது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 
திருப்பூர், பெரியகடைவீதியில் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லையாம். 
இந்நிலையில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT