திருப்பூர்

வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம்

DIN


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வேலையில்லாத சிறுபான்மையினர்கள் இலவச திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் 
(ந்ஹன்ள்ட்ஹப் ள்ங் ந்ன்ள்ட்ஹப்ற்ட்ஹ) திட்டத்தின் கீழ் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியானது, திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (அற்க்ஸ்ரீ) மூலமாக வழங்கப்படுகிறது. இதில், எம்பிராய்டரி தொடர்பான 3 மாத பயிற்சி 50 பயனாளிகளுக்கு அளிக்கப்பட உள்ளது.  
இத்திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள், ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1,000 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும்.
இதற்கான நேர்காணல், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. 
இப்பயிற்சித் திட்டத்தில் சேர விரும்பும் நபர்கள் அசல் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தின் உதவி மண்டல மேலாளரை 93805 - 13874 என்ற செல்லிடப்பேசி எண் அல்லது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தை 044-28514846 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT