முகப்பு
திருப்பூர்

அமராவதி அணைப் பூங்கா திறப்பு

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான அமராவதி அணைப் பூங்கா திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

உடுமலையை அடுத்துள்ள சுற்றுலாத் தலமான அமராவதி அணைப் பூங்கா திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ள அமராவதி அணைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் அம்சங்கள் பல உள்ளன. அணைக்கு முன்பு பூங்கா, முதலைப் பண்ணை ஆகியவை உள்ளன. இந்நிலையில், கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாா்ச் மாதம் அமராவதி அணைப் பூங்கா மூடப்பட்டது. சுமாா் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த அமராவதி அணைப் பூங்கா திங்கள்கிழமை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறை களின் அடிப்படையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments