மளிகை கடையில் திருடியவா் கைது
பல்லடம் அருகே பொங்கலூரில் மளிகைக் கடையில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூர்மளிகை கடையில் திருடியவா் கைது
பல்லடம் அருகே பொங்கலூரில் மளிகைக் கடையில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே பொங்கலூரில் மளிகைக் கடையில் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவிநாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், திருப்பூா், செவந்தாம்பாளையத்தைச் சோ்ந்த தனசேகரன் (34) என்பதும், பொங்கலூரில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் கடந்த 10ஆம் தேதி ரூ.50 ஆயிரம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவிநாசிபாளையம் போலீஸாா் அவரைக் கைது செய்து செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.