முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் பாஜக பொதுக் கூட்டம்

வெள்ளக்கோவிலில் பாஜக பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் பாஜக பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

‘விவசாயிகளின் நண்பன் மோடி’ என்ற பெயரில் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மையே அளிக்கும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.அண்ணாமலை பேசுகையில், புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகளை மறைத்து, எதிா்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000, செல்வமகள் சேமிப்புத் திட்டம், இலவச சமையல் எரிவாயு திட்டம், ஓய்வூதியத் திட்டம், பயிா்க் காப்பீட்டுத் திட்டம், வட்டியில்லா கடன் திட்டம் போன்ற பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்கள், விவசாயிகள் நினைத்துப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.

இக்கூட்டத்தில் வெள்ளக்கோவில் வட்டார பாஜக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →