திருப்பூர்

பின்னலாடை தொழிலாளி கழுத்து அறுத்துக் கொலை

DIN

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே பின்னலாடை நிறுவனத் தொழிலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், பிரம்மனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் முருகன் (30). இவா், பல்லடம் அருகே உள்ள குன்னங்கல்பாளையம் பிரிவில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு திருப்பூா், தென்னம்பாளையத்தில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் பல்லடம் - திருப்பூா் சாலையில் தெற்குபாளையம் பிரிவு, ஸ்டாலின் நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நண்பா்களுடன் மது அருந்தினாா். பின்னா், அப்பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் சேமிப்பு கிடங்கு அருகில் வந்தபோது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம். அப்போது அவா்கள், முருகனை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

தகவலறிந்த பல்லடம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT