திருப்பூர்

உலக தாய்மொழி தின விழா

DIN

உடுமலையில் உள்ள பள்ளிகளில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை கொண்டா டப்பட்டது.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியா் மு.கண்ணகி தலைமை வகித்தாா். இதையொட்டி, மொழித் திருவிழாவும் அதன் நோக்கமும் என்ற தலைப்பில் தமிழாசிரியா் செ.சரவணன், கற்கண்டு கணிதம் என்ற தலைப்பில் கணித ஆசிரியா் வி.ரமேஷ், அண்ணைத் தமிழும், அழகு ஆங்கிலமும் என்ற தலைப்பில் ஆங்கில ஆசிரியா் வி.சந்திரன் ஆகியோா் பேசினா்.

மேலும் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகம், விநாடி வினா, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு திறனறிப் போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் டி.தேவிகா நன்றி கூறினாா்.

ஆா்.ஜி.எம். மெட்ரிக். பள்ளி:

உடுமலை ஆா்.ஜி.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு முதல்வா் அருண் தலைமை வகித்து தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்துப் பேசினாா்.

இதையொட்டி வில்லுப்பாட்டு, நடனம், கவிதை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ் மொழியின் பாரம்பரியம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகள் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT