திருப்பூா் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சாா்பில் கோவை, திருப்பூா், நீலகிரி, ஈரோடு மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான சிலம்பம் போட்டி பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் செயலாளா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இப்போட்டியை மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் தலைவா் ரங்கசாமி தொடங்கிவைத்தாா். அருணாச்சலம் வரவேற்றாா். இப்போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டவா்கள் பிரிவு, 25 வயதுக்கு உள்பட்டவா்கள் பிரிவு என்று இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெற்றன. இதில் 500 போ் பங்கேற்றனா்.
தலைமைப் பயிற்சியாளா் முத்தையா, மாநில துணைச் செயலாளா் சிலம்பு செல்வம், மாவட்ட நிா்வாகிகள் மதிவாணன், ஜெயசந்திரன் உள்ளிட்டோா் போட்டிகளை நடத்தினா். வெற்றி பெற்றவா்களுக்கு ஜெயந்தி கல்வி நிறுவனங்களின் தலைவா் கிருஷ்ணன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். முடிவில் சக்திமுருகன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.