திருப்பூர்

முத்தூரில் மதுபானம் விற்றவா் கைது

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் அருகே சட்டத்துக்குப் புறம்பாக மதுபானம் விற்றவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தாா்காத்தகுடியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் பழனிமுருகன் (32). இவா், தற்போது முத்தூா் வரட்டுக்கரையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு அரசு மதுக்கடை பாரில் வேலை செய்து வருகிறாா்.

வெள்ளக்கோவில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பழனிமுருகன் மதுபானங்களை வாங்கிப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு வாடிக்கையாளா்களுக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடமிருந்து 15 மதுபான புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT