அவிநாசி அருகே தெக்கலூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே தெக்கலூா் டீச்சா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலு மகன் சங்கா்(43). இவா், தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்தவா். வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான அரூருக்கு குடும்பத்துடன் நவம்பா் 13ஆம் தேதி சென்றுள்ளாா். பிறகு வீட்டுக்கு திங்கள்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு பவுன் தங்க நகை, மடிக்கணினி, செல்லிடப்பேசி, ரொக்கப் பணம் ரூ. 25 ஆயிரம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.