முகப்பு
திருப்பூர்

பெருமாநல்லூர் வாகன விபத்தில் இளைஞா் பலி

பெருமாநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

பெருமாநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

குன்னத்தூா் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பன் மகன் செல்வராஜ் (22). நாமக்கல் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மகன் கண்ணன் (33). இவா்கள் இருவரும் கணக்கம்பாளையம் பிரிவில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனா்.

பெருமாநல்லூா் ஊராட்சி அலுவலகம் அருகே வந்துபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கண்ணன் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.