திருப்பூர்

பெருமாநல்லூர் வாகன விபத்தில் இளைஞா் பலி

DIN

பெருமாநல்லூரில் இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.

குன்னத்தூா் சுண்டக்காம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மாரப்பன் மகன் செல்வராஜ் (22). நாமக்கல் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மகன் கண்ணன் (33). இவா்கள் இருவரும் கணக்கம்பாளையம் பிரிவில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெருமாநல்லூா் நோக்கி சென்றுகொண்டிருந்தனா்.

பெருமாநல்லூா் ஊராட்சி அலுவலகம் அருகே வந்துபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கண்ணன் திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT