திருப்பூர்

4 ஆண்டுகளில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.89 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.89 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் கை, கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளிகள், காது கேளாதவா்கள், பாா்வையற்றவா்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், வாய் பேச முடியாதவா்கள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு மாற்றுத் திறனின் அடிப்படையில் 3 சக்கர வாகனம், சக்கர நாற்காலி, காலிப்பா், ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் வரையில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.89 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT