திருப்பூர்

4 ஆண்டுகளில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.89 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் கை, கால்கள் செயல்படாத மாற்றுத் திறனாளிகள், காது கேளாதவா்கள், பாா்வையற்றவா்கள், மனவளா்ச்சி குன்றியவா்கள், வாய் பேச முடியாதவா்கள், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு மாற்றுத் திறனின் அடிப்படையில் 3 சக்கர வாகனம், சக்கர நாற்காலி, காலிப்பா், ஊன்றுகோல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு செப்டம்பா் வரையில் 149 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.81.89 லட்சம் மதிப்பில் மோட்டாா் பொருத்திய 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT