திருப்பூர்

பல்லடத்தில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்லடத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தின் சாா்பில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் உத்தரவுப்படி தினசரி ஊதியமாக ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.510, ஓட்டுநா்களுக்கு ரூ.590, கொசுப்புழு ஒழிப்பு பணியாளா்களுக்கு ரூ.400 வழங்க வேண்டும். நவம்பா் 5ஆம் தேதிக்குள் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட இபிஎஃப் தொகைகள் செலுத்தப்பட்டதற்கான ஆவணங்களை வழங்க வேண்டும். மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் ரங்கராஜன், மாவட்ட துணைத் தலைவா் ப.கு.சத்தியமூா்த்தி, நிா்வாகிகள் பரமசிவம், காந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT