வெள்ளக்கோவில் வாரச் சந்தை துவக்கம்
வெள்ளக்கோவில் வாரச் சந்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.
வெள்ளக்கோவில் வாரச் சந்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.
வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் ஞாயிற்றுக்கிழமைதோறும் வாரச் சந்தை செயல்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மாா்ச் மாதம் சந்தை மூடப்பட்டது. தற்போது, 5 மாதங்களுக்குப் பிறகு சந்தை துவங்கியது. நீண்ட இடைவெளிக்குப் பின் ஞாயிற்றுக்கிழமைமுதல் சந்தையில் தொடங்கியது. ஆனால், வியாபாரிகள் முழுமையாக வந்திருந்த நிலையில், வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.