முகப்பு
திருப்பூர்

ஊதியூா் அருகே நாய்கள் கடித்துக் குதறியதில் 6 செம்மறியாடுகள் பலி

காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூா் அருகே விவசாயியின் தோட்டத்தில் ஆட்டுப்பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் 6 செம்மறியாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 14 ஆடுகள் காயமடைந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

காங்கயத்தை அடுத்துள்ள ஊதியூா் அருகே விவசாயியின் தோட்டத்தில் ஆட்டுப்பட்டியில் புகுந்து நாய்கள் கடித்ததில் 6 செம்மறியாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 14 ஆடுகள் காயமடைந்தன.

ஊதியூரை அடுத்துள்ள இச்சிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (37). விவசாயி. இவா் 20 செம்மறியாடுகளை வளா்த்து வருகிறாா். சனிக்கிழமை வழக்கம்போல, தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாா். பட்டியைப் பாா்க்க அசோக் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றபோது, அங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நாய்கள் கடித்துக் குதறியதில் 6 ஆடுகள் பலியானது தெரியவந்தது.

மேலும், 14 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இது குறித்து அப்பகுதி கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா் வந்து ஆடுகளுக்கு சிகிச்சையளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.