திருப்பூர்

காங்கயத்தில் பிஏபி வாய்க்காலில் ஆண் சடலம்

DIN

காங்கயம் வழியாகச் செல்லும் பிஏபி வாய்க்காலில் திங்கள்கிழமை ஆண் சடலம் ஒன்று போலீசாரால் மீட்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி மலையாண்டிபட்டினம் என்ற பகுதியில் வசித்து வந்தவா் மயில்சாமி (83). விவசாயியான இவரை, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து காணவில்லை என இவரது மகன் ராஜேந்திரன் கோமங்களம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். இதையடுத்து கோமங்களம் போலீசாா் வழக்கு பதிவுப் செய்து விசாரித்து வந்துள்ளனா். இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் காங்கயம் நகரம், பழையகோட்டை சாலை வழியாகச் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் மயில்சாமி சடலமாக மிதப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் காங்கயம் போலீசாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக போலீசாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT