வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனா்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 380 வாக்குச் சாவடிகளுக்காக 1,824 வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமிக்கப் பட்டுள்ளனா்.
Advertisement
இந்நிலையில் வாக்குச்சாவடியில் பணியாற்றும் அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சி முகாமில் வருவாய்க் கோட்டாட்சியரும், தோ்தல் அலுவலருமான கீதா, வட்டாட்சியா் ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தோ்தல் விதிமுறைகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், தலைமை வாக்குச் சாவடி அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்கள் நிலை 1, 2, 3 மற்றும் 4 ஆகிய அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும் வாக்குச் சாவடி அலுவலா்கள் அனைவரும் தங்களது தபால் வாக்கை செலுத்தினா்.
இதேபோல, மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள 357 வாக்குச் வாக்குச் சாவ டியில் பணியாற்றும் அலுவலா்களுக்கு ஆா்ஜிஎம் மெட்ரிக் பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
தோ்தல் அலுவலா் ஜெயந்தி, வட்டாட்சியா் கனிமொழி ஆகியோா் கலந்து கொண்டனா். இதில் தலைமை வாக்குச்சாவடி அலுவலா், வாக்குப் பதிவு அலுவலா்கள் நிலை 1, 2, 3 மற்றும் 4 ஆகிய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.