டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!
சிஎஸ்கே x ஆர்சிபி ஐபிஎல் ஆட்டம் பற்றி...
இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே, ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடலில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்திற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. அதில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு சாதகமாக நாணயத்தின் முகம் பளிச்சிட்டது. இதையடுத்து, சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவெடுத்திருப்பதாக அவர் சொன்னார்.
முன்னதாக, ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே விளையாடிய 2 ஆட்டங்களிலும் மோசமாக எதிரணிகளிடம் வீழ்ந்தது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தமது முதல் வெற்றியை ருசிக்க சிஎஸ்கே ஆர்சிபிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முனைப்பு காட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.
Advertisement