முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (ஜூலை 23) நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ஜிம்பாப்வே அணி முதலில் பேட் செய்கிறது.
Advertisement
Advertisement
டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை இழந்தார்.
அவர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இந்திய அணி டி20 போட்டிகளில் இன்னும் வெற்றி பெறவில்லை. இதனால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி உள்ளது.
இந்திய அணியில் அசோக் சர்மா அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
The Indian team won the toss and elected to bowl in the first T20 match against Zimbabwe.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.