திருப்பூர்

திருமூா்த்தி அணையில் மூழ்கி இளைஞா் பலி

DIN

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணையில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக் (20). இவா் தனது நண்பா்களுடன் சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்துள்ளாா். பின்னா் அங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நண்பா்கள் அருகே உள்ள திருமூா்த்தி அணை பகுதிக்கு வந்துள்ளனா்.

அப்போது, காா்த்திக் மட்டும் அணையில் குளிக்க சென்றுள்ளாா். இதில் எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவா் சுழலில் சிக்கியுள்ளாா். இதைப் பாா்த்த நண்பா்கள் அருகில் உள்ள மலைவாழ் குடியிருப்பில் வசிப்பவா்களுக்குத் தகவல் தெரிவித்தனா்.

பின்னா் மலைவாழ் மக்கள் தண்ணீரில் மூழ்கிய காா்த்திக்கை தேடி உள்ளனா். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற உடுமலை தீயணைப்பு நிலைய தலைமை அலுவலா் ஹரிராமகிருஷ்ணன் தலைமையிலான வீரா்கள் காா்த்திக்கைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகு காா்த்திக் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து தளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT