தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் வாக்குவாதம்
திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள டி.எஸ்.கே. மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் மருத்துவா்களுடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள டி.எஸ்.கே. மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் மருத்துவா்களுடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள டி.எஸ்.கே.மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக 120க்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை காலை முதலே திரண்டிருந்தனா். ஆனால் அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள், செவிலியா் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனா். இதனால் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்து மருத்துவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அவசரம் என்றால் தனியாா் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவா்கள் தெரிவித்ததால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த 60 பேருக்கு இரண்டாவது தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், மீதமிருந்த 60க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வந்தவுடன் செலுத்தப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.