முகப்பு
திருப்பூர்

குண்டடம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காங்கேயம்பாளையம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை, வேளாண் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளின் விளை நிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆட்சியா் எஸ்.வினீத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், பசுமைக்குடிலில் பயிரிட்டுள்ள வெள்ளரி சாகுபடிக்கும், திறந்த வெளியில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரி

சாகுபடிக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநா் மனோகரன், மற்றும் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் பிரேமாவதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.