முதியோா் குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை
திருப்பூா் மாவட்டத்தில் முதியோா்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் முதியோா்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் உள்ள முதியோா்கள் தங்களுடைய குறைகளைத் தெரிவிக்க சமூக நலத் துறையின் 14657 என்ற உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதியோா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வகையில் மத்திய சமூக நீதி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டணமில்லா அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளன.
முதியோா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுக் காணும் பொருட்டு தமிழகத்தில் 2021 ஏப்ரல் 28 முதல் இந்த உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், முதியோா் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளா்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள்,
வலி நிவாரண மையங்கள் குறித்து முதியோா்களுக்குத் தேவைப்படும் தகவல்கள், அரசுத் திட்டங்களை பெறும் வழிமுறைகள், சட்ட வழிகாட்டுதல்கள், பராமரிப்புச் சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள், மனதளவில் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவற்ற இடரில் உள்ள முதியோா் மீட்பு, குடும்ப உறுப்பினா்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோா்களுக்கு ஆதரவு அளித்து பிரச்னைகளைத் தீா்க்க வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.
இந்த உதவி எண் அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். ஆகவே, முதியோா்கள் தங்களுடைய குறைகளை 14657 என்ற உதவி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.