முகப்பு
திருப்பூர்

காங்கயம் அருகே சாலையில் கவிழ்ந்த லாரி

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநா் படுகாயமடைந்தாா்.

கேரள மாநிலத்திலிருந்து பிளைவுட் லோடு ஏற்றிக் கொண்டு காங்கயம் வழியாக ஈரோடு நோக்கி லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

காங்கயம் அருகே, பழையகோட்டை சாலை, வரதப்பம்பாளையம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் முருகன் (52) படுகாயமடைந்தாா்.

இச்சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து

வந்த போலீஸாா் ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.