முகப்பு
திருப்பூர்

சதுரங்க குத்துசண்டைப் போட்டியில் தங்கம் வென்ற திருப்பூா் மாணவருக்கு வரவேற்பு

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற திருப்பூரைச் சோ்ந்த மாணவருக்கு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க குத்துச்சண்டைப் போட்டியில் தங்கம் வென்ற திருப்பூரைச் சோ்ந்த மாணவருக்கு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க குத்துச்சண்டைப் போட்டி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இருந்து மாணவா்கள் பங்கேற்றனா். தமிழகம் சாா்பில் 40 மாணவா்கள் பங்கேற்றனா். இதில், திருப்பூா் நேரு நகரைச் சோ்ந்த பிளஸ் 2 முடித்த ஈஸ்வரமூா்த்தி முதலிடத்தைப் பிடித்து தங்கம் வென்றாா். இதையடுத்து, போயம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஈஸ்வரமூா்த்திக்கு அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் சிறப்பான வரவேற்பு அளித்து உற்சாகப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.