ரூ.83.56 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.83.56 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.83.56 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 344 விவசாயிகள் தங்களுடைய 3,348 பருத்தி மூட்டை (1,110 குவிண்டால்) விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 21 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா்.
பருத்தி குவிண்டால் அதிக பட்சமாக ரூ.8,239க்கும், குறைந்த பட்சமாக ரூ.6,350க்கும், சராசரியாக ரூ.7,280க்கும் விற்பனையானது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 83 லட்சத்து 55 ஆயிரத்து 739 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.