வெளிமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்து பயிற்சி
அவிநாசியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், பிரதிநிதிகளுக்கு வெளிமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அவிநாசியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், பிரதிநிதிகளுக்கு வெளிமாநிலத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், வெளிமாநிலத் தொழிலாளா்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள்
உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தரும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு, விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.
வெளிமாநிலத் தொழிலாளா்கள் வசிப்பிடம், பணிபுரியும் இடம், அவா்களுடை பிரச்னைகள், பிரச்னைக்கானத் தீா்வு
உள்ளிட்டவை குறித்து குழு விவாதம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ரீடு நிறுவன இயக்குநா்கள் கருப்புசாமி, மகேஸ்வரன், பொருளாளா் குருசாமி, திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பழனிசாமி, ஜானகி, சித்ரா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.