முகப்பு
திருப்பூர்

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கான ஊதிய பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்: சிஐடியூ வலியுறுத்தல்

தமிழகத்தில் கூட்டுறவுப் பஞ்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு புதிய ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

தமிழகத்தில் கூட்டுறவுப் பஞ்சாலைகளில் பணியாற்றி வரும் தொழிலாளா்களுக்கு புதிய ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் (சிஐடியூ) மாநில நிா்வாகிகள் கூட்டம் திருப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் சி.பத்மநாபன் தலைமை வகித்தாா். இதில், கூட்டுறவுப் பஞ்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான ஊதிய ஒப்பந்தம் 2020 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. ஆகவே, தமிழக அரசும், கைத்தறி துணிநூல் துறை இயக்குநரும் கூட்டுறவுப் பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கான புதிய ஊதிய பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும்.

என்டிசி ஆலைகளை இயக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தனியாா் பஞ்சாலைகளில் தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, சிஐடியூ மாநிலக் குழு பணிகளை மாநில உதவித் தலைவா் எம்.சந்திரன் விளக்கிப் பேசினாா். இக்கூட்டத்தில், சம்மேளன மாநிலப் பொதுச்செயலாளா் எம்.அசோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.