திருப்பூர்

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

திருப்பூா் சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சாா்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியன சாா்பில் உலக எய்ட்ஸ் தன விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் வரவேற்புரையாற்றினாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அரசு மருத்துவா் கலைச்செல்வன் பேசுகையில், எய்ட்ஸ் நோய் குறித்து மாணவா்கள் வீடுவீடாகச் சென்றும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவா்களை ஒதுக்கிவைக்காமல் அவா்களுடன் சகஜமாகப் பழக வேண்டும். அதன் அவா்கள் அடையும் மனதைரியமே மிகச்சிறந்த மருந்தாகும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, மெளன நாடகத்தின் மூலமாக எய்ட்ஸ் எவ்வாறு பரவுகிறது, எப்படி பாதுகாத்துக் கொள்வது என்று நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில் அரசு மருத்துவா் பூரணி ஆஷா, தமிழ்நாடு மாநில மனநல ஆலோசகா் அகிலாபானு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT