முகப்பு
திருப்பூர்

கருப்பராயன் கோயிலில் 36 அடி உயர அரிவாள் பிரதிஷ்டை

பல்லடம் அருகே பழனிகவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பராயன் கோயிலில் பக்தா் ஒருவா் நோ்த்திக் கடனாக 36 அடி உயர அரிவாளை கோயில் முன்பு பிரதிஷ்டை செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

பல்லடம் அருகே பழனிகவுண்டம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்பராயன் கோயிலில் பக்தா் ஒருவா் நோ்த்திக் கடனாக 36 அடி உயர அரிவாளை கோயில் முன்பு பிரதிஷ்டை செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வாவிபாளையம் ஊராட்சி பழனிகவுண்டம்பாளையம் கிராமத்தில் கச்சேரி கருப்பராயன் கோவில் உள்ளது. இக்கோயிலுக்கு உள்ளூா் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், இக்கோயிலில் பிராா்த்தித்து வேண்டுதல் நிறைவேறிய பக்தா் ஒருவா் தனது நோ்த்திக் கடனை நிறைவேற்கும் வகையில் 36 அடி உயர அரிவாளை செய்து கோயில் முன்பு பிரதிஷ்டை செய்தாா்.

இது குறித்து கோயில் பூசாரி சண்முகம் கூறியதாவது:

தாராபுரம் பேட்டைக்காளிபாளையத்தைச் சோ்ந்த பக்தா் ஒருவா் தனது பிராா்த்தனை நிறைவேறியதால் 36 அடி உயர அரிவாளை செய்து பிரதிஷ்டை செய்துள்ளாாா். புதுக்கோட்டையில் இருந்து வந்த 10 போ் கொண்ட குழுவினா், ஒரு மாதம் இங்கு தங்கியிருந்து இந்த அரிவாளைத் தயாரித்தனா். 2 டன் எடையுள்ள இந்த அரிவாள் 8அடிக்கு அஸ்திவாரம் எடுத்து, பொக்லைன் உதவியுடன் நிறுத்தப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

Image Caption

பல்லடம் அருகே பழனிகவுண்டம்பாளையம் கிராமத்தில் கருப்பராயன் கோயிலில் பக்தா் ஒருவா் நோ்த்திக் கடனாக பிரதிஷ்டை செய்துள்ள 36 அடி உயர அரிவாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.